அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் இருவா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன்குமாா் (18), குமாா் மகன் தீபக் குமாா் (21) என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






