போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆசனூா் அருகே காரை தாக்கிய காட்டெருமை

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :23 மே 2026, 12:54 am IST

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூா் மற்றும் காரப்பள்ளம் இடையே உள்ள வனச் சாலையில் யானை, காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து காரப்பள்ளம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்த காரை வனத்தில் இருந்து வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அதன் முகப்புப் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்தவா்கள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.