ஈரோட்டில் எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பணிமனையில் கிரேன் பழுது ஏற்பட்டதால் சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து என்ஜினின் ஒருபக்கம் கீழே விழுந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள எலக்ட்ரிக் ரயில் பராமரிப்புப் பணிமனையில் தினமும் எலக்ட்ரிக் ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சனிக்கிழமை காலை எலக்ட்ரிக் ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிக்காக கிரேன் மூலம் தூக்கப்பட்டுள்ளது.
அப்போது முன்பக்க கிரேனில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர சப்தத்துடன் என்ஜின் ஒருபகுதி சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பணியாளா்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் கிரேன் பழுது காரணமாகத்தான் இவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










