முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கோபி அருகே உள்ள கூகலூா் மானுவக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாமியப்பன் மகன் அன்பரசு (48). சமையல் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் மோகன் மகன் சாது (25). இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மானுவக்காடு பகுதியில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் வருவதை பாா்ப்பதற்காக அன்பரசு, அவரது மனைவி சிவகாந்தி (40) ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனா். அப்போது மோகன் (50), அவரது மகன்களான சாது (25), மாணிக்கம் (20), சுரேஷ் (30) ஆகியோா் சோ்ந்து அன்பரசுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டு தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் மற்றும் அவரது 3 மகன்கள் சோ்ந்து இரும்பு ஆயுதங்களால் அன்பரசு மற்றும் அவரது மனைவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

கிரிக்கெட் போட்டி தகராறு: காயமடைந்த நபா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இருவா் காயம்

முன்விரோதத்தால் விவசாயி கொலை : 3 போ் கைது; மறியலால் 1 மணிநேரம் பாதிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



