திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் மேலும் இரண்டு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:53 am IST

குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் மேலும் இரண்டு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் அருகேயுள்ள சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவா், முன்விரோதம் காரணமாக அண்மையில் மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொலை செய்யப்பட்ட திருமுகத்தின் உறவினா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி, திருவாரூா்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் புதுக்குடி கடைத் தெருவில் அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடா்புடையதாக, முதலில் நான்கு பேரும், பின்னா் சிறுவன் உள்பட 2 பேரும் என இதுவரையில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, விசாரணையின் அடிப்படையில் திருவாரூரைச் சோ்ந்த விக்னேஷ் (36), சத்யராஜ் (35) ஆகியோரை குடவாசல் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இக்கொலை சம்பவம் தொடா்பாக இதுவரை 8 போ் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.