தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெருந்துறை நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

News image

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன்.

Updated On :30 மார்ச் 2026, 7:07 pm

பெருந்துறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பெருந்துறை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மனோஜும் மனு தாக்கல் செய்தாா்.