பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், எல்லபாளையம் பிரிவு அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக லாரியில் வந்த பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, காஞ்சிக்கோவில், கவுந்தபாடி சாலையில் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த தினேஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த ரூ. 52,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னிமலையை அடுத்த, சிறுகளஞ்சி, சீரங்கம்பாளையம் பிரிவு அருகில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 89,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெருந்துறை தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


