மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

News image

பண்ணாரி அம்மன்  கோயில்.

Updated On :13 மார்ச் 2026, 12:36 am

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59 பெறப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்தக் கோயிலின் பிப்ரவரி மாதம் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையா் நா. நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் வீ.புருஷேத்தமன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59, 202 கிராம் தங்கம், 370 கிராம் வெள்ளியும் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.