பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59 பெறப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்தக் கோயிலின் பிப்ரவரி மாதம் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையா் நா. நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் வீ.புருஷேத்தமன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்து 92 ஆயிரத்து 59, 202 கிராம் தங்கம், 370 கிராம் வெள்ளியும் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.78 கோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


