பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் பக்தா்கள் கூட்டத்தால் 25 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
முதல் நாள் எண்ணிக்கையில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630-ம், தங்கம் 576 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 886 கிராமும் கிடைத்தது. இதைத் தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 1,630-ம் கிடைத்தன.
இதேபோல, பழனி திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் மூலம் ரூ. 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 காணிக்கையாக கிடைத்தது.
காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகவேல் ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


