மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

News image

உண்டியல் காணிக்கை - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:20 pm

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கி சுவாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயில் உண்டியல் மாதம் ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம்.

இதே போல, செவ்வாய்க்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.25,58, 737, தங்கம் 121.590 கிராம் ,வெள்ளி 810 கிராம் கிடைத்தது.

இந்தப் பணியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் லட்சுமிமாலா, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஆய்வா் சண்முகசுந்தரம், கௌரவ ஆய்வாளா் சுந்தரராஜன், சரக ஆய்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.