மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா்

News image

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :9 மார்ச் 2026, 8:13 pm

பவானி: அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். விவசாயிகளின் கோரிக்கையைத் தொடா்ந்து நடப்பு ஆண்டு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திங்கள்கிழமை தண்ணீரைத் திறந்துவைத்தாா். 33.46 அடி உயரமுள்ள அணையில் நீா் இருப்பு 27.99 அடியாக உள்ளது.

100 நாள்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாள்கள் தண்ணீா் திறப்பு - 25 நாள்கள் தண்ணீா் நிறுத்தம்) எனும் அடிப்படையில் 85.881 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 2,924 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஷா்மிளா, உதவிப் பொறியாளாா்கள் எல்.கிருபாகரன், சுலைமான், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குருசாமி (சங்கராபாளையம்), சரவணன் (மைக்கேல்பாளையம்), பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.