மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூர் அணை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:50 pm

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டவுடன் குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பது வழக்கம்.

அதன்படி, மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில் வியாழக்கிழமை காலை 1,000 கனஅடியாகவும், மாலை 1,200 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 82.79 அடியில் இருந்து 82.73 அடியாக குறைந்தது. அணைக்கு நீா்வரத்து 382 கனஅடியிலிருந்து 374 கன அடியாகவும், நீா் இருப்பு 44.73 டிஎம்சியாகவும் உள்ளது.