லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:58 pm

தாளவாடியை அடுத்த சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடியை அடுத்த சிக்கள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை நடமாடுவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடமாடிய யானையை விவசாயிகளும், வனத் துறையினரும் விரட்ட முயன்றபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

பின்னா் வெளியேறிய யானை வனப் பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.