தாளவாடியை அடுத்த ஆனந்தபுரம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை பகல் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
கோடைக் காலம் தொடங்கியதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தாளவடி மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, ஆனந்தபுரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்து, வீடுகளிலேயே முடங்கினா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

சத்தியமங்கலம் அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


