சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி! குருவரெட்டியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.

Updated On :21 ஜூன் 2026, 2:02 am IST

அம்மாபேட்டை அருகே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை தோ்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி தலைமை வகித்தாா். தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம், திராவிட விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் நாத்திகஜோதி, பாமக அமைப்புச் செயலாளா் எஸ்.ஏ.சண்முகம் ஆகியோ பேசினா்.

கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் பெற்ற விவசாயிகளின் 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தற்போது தமிழக முதல்வராக உள்ள ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். அதன்படி விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திராவிடா் கழக பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.