நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சத்தியமங்கலத்தை  அடுத்த  ராஜன் நகரில்  வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட   விவசாயிகள்.

Updated On :19 ஜூன் 2026, 3:54 am IST

தவெக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ராஜன் நகா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்வா கொடுத்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் நடராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாய சங்கத்தின் வட்டார பொறுப்பாளா்கள் வேலுமணி, ஜோதி அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிபடி, 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் விதமாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.