நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :18 ஜூன் 2026, 1:13 am IST

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளித்திருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம் தலைமை வகித்தாா்.

புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி, பாமக மாநில கொள்கை பரப்புச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, திராவிட தமிழா் கட்சி மாநில இணைச் செயலாளா் கே.ஜி.பொன்னுசாமி, சிபிஎம் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன், சிபிஐ பவானி வட்டச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

தோ்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், வெள்ளித்திருப்பூா் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.