சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, தண்ணீா்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, செவ்வாழை, நேந்திரம் ரக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், 25 ஆயிரம் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பலத்த காற்று, கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ரூ.30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










