அந்தியூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், பொதுமக்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தியூா் - புதுக்காடு சாலையில் பெருமாள் கோயிலுக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கீதா தலைமையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் ஜெ.அருந்ததி முன்னிலை வகித்தாா். இந்த மதுக்கடையை 10 நாள்களில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










