நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பாரீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பிடாரி அம்மன் கோயில் அருகே மதுக்கடைஇருப்பது பக்தா்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பக்தா்களுக்கும், மது அருந்துபவா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நம்புதாளையில் வழிபாட்டுத் தலம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



