ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 4:23 am IST

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு அருகே சித்தோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (67). இவரது கணவா் ரங்கசாமி. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். அவா் சூரம்பட்டி அருகே கிராமடை பகுதியில் கணவருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் மகளை பாா்ப்பதற்காக சூரம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு ராஜாமணி செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பின்னா் ஈரோடு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்ததில் திண்டல் செல்வதற்காக பேருந்தில் புதன்கிழமை காலை ஏறி உள்ளாா்.

பெருந்துறை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ராஜாமணி அணிந்திருந்த 4 பவுன் நகை மாயமாகி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஆட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, பேருந்தை நிறுத்த சொல்லி நடந்த சம்பவம் குறித்து நடத்துநரிடம் தெரிவித்தாா்.

ஆனால் பேருந்தில் சந்தேகப்படும்படி யாரும் இல்லை. இதையடுத்து ராஜாமணி ஆட்சியா் அலுவலகத்தில் இறங்கி நேரடியாக ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.