டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:36 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருப்பூா், பத்மாவதி நகரைச் சோ்ந்தவா் இளங்கோ (55). இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி மாலை பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்தாா். விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவு அருகே வந்தபோது எதிா்பாராமல் இருசக்கர வாகனம் சாலையில் இருந்த தடுப்பில் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த இளங்கோவை அருகில் இருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.