பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஈரோட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

News image
ஈரோடு, தண்ணீா்ப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் புதன்கிழமை இரவு நேரத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஈரோடு நகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதன்பிறகு தூறல் தூறிக்கொண்டு இருந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவில் திடீரென பெய்த மழையால் ஈரோடு நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

பெருந்துறை, பவானி, கோபி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த ஈரோடு மாவட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.