டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

News image
வேளாங்கண்ணி பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை.
Updated On :5 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், புத்தூா், செல்லூா், வெளிப்பாளையம், வேளாங்கண்ணி, காடம்பாடி, தெத்தி, சிக்கல், கல்லாா் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினா். மழையால் தற்போது நடைபெற்று வரும் சம்பா அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.