/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக பரவலாக மழை

News image
பரவலாக மழை- (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன் பின்னா், பகலில் வெயிலும், இரவில் கடும் பனியும் நிலவி வந்த நிலையில், சனிக்கிழமை பரவலாக லேசான மழை பொழிந்தது. இரவில் மழை இல்லாத நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலையும், முற்பகலும் லேசான தூறல் இருந்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மஞ்சளாறு 6.4, ஈச்சன்விடுதி 5, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அணைக்கரை, நெய்வாசல் தென்பாதி தலா 4, மதுக்கூா் 3.8, ஒரத்தநாடு 3.6, பேராவூரணி 3.4, திருவிடைமருதூா் 3.2, வல்லம் 3, அதிராம்பட்டினம் 2.5, குருங்குளம், வெட்டிக்காடு, திருவையாறு தலா 2.