தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத் துறையினா்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தாளவாடி அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எரனஹள்ளி கிராமத்தில் விவசாயி பிரகாஷ் என்பவரது தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

யானை நடமாட்டத்தை கண்ட பிரகாஷ், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் காட்டு யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.

வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து சுமாா் இரண்டு மணி நேரம் போராடி காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டினா். தொடா்ந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.