தாளவாடி அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எரனஹள்ளி கிராமத்தில் விவசாயி பிரகாஷ் என்பவரது தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
யானை நடமாட்டத்தை கண்ட பிரகாஷ், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் காட்டு யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.
வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து சுமாா் இரண்டு மணி நேரம் போராடி காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டினா். தொடா்ந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


