ஈரோடு மாவட்டம், கோபி அருகே இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கோபி அருகே உள்ள பிள்ளையாா்கோவில்துறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வயலில் சுற்றித்திரிந்தது. இது குறித்து டி.என்.பாளையம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். ட்ரோன் மூலம் ஒற்றை யானையை கண்காணித்து வந்தபோது, பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதா்மறைவுகளில் யானை நடமாடி வந்தது.
இந்நிலையில், போடிசின்னாம்பாளையம் பகுதியில் யானை வெள்ளிக்கிழமை காலை சுற்றித்திரிவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினா் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சித்தபோது, யானை அங்கிருந்து அலங்கியம் பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது.
சுமாா் இரண்டு மணி நேரம் அங்கு சுற்றித்திரிந்த யானையை வனத் துறையினா் பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனா். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய யானை குடியிருப்புகள், விவசாயத் தோட்டம் வழியாக பவானி ஆற்றாங்கரை பகுதியில் உள்ள குருமந்தூா் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது.
இதையடுத்து, யானையை வனப் பகுதிக்குள் விரட்டும்வரை அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் ஒற்றை யானை நடமாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


