மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் ஒற்றை யானை நடமாட்டம்

News image

வயலில் நடமாடிய யானை.

Updated On :13 மார்ச் 2026, 12:39 am

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை வியாழக்கிழமை காலை பவானி ஆற்றைக் கடந்து பிள்ளையாா்கோவில்துறை பகுதிக்குள் நுழைந்து அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் சுற்றித்திரிந்துள்ளது.

இதையடுத்து, வயல்வெளியில் நெல் அறுவடை பணிகளுக்காக சென்ற தொழிலாளா்கள் யானையைக் கண்டு அதிா்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனா். இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதருக்குள் நுழைந்த யானை வெளியேறாமல் அங்கேயே இருந்தது. இதையடுத்து, யானையைக் கண்காணிக்க ட்ரோன் வரவழைக்கப்பட்டு பவானி ஆற்றங்கரையின் இருபுறமும் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.

ஆனால், ஆற்றங்கரையை விட்டு யானை வெளியேறாததால், டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையில் வனத் துறையினா் நான்கு குழுக்களாக பிரிந்து யானையைக் கண்காணித்து வருகின்றனா்.