மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுடன் வேளாளா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள்.

Updated On :1 மே 2026, 1:57 am IST

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ் மண்டல தலைவா் ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். ஆா். குமாரவேலன் வரவேற்றாா். கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வா் எம்.ஜெயராமன் வாசித்தாா்.

வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ். டி. சந்திரசேகா் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா் எம். யுவராஜா ஆகியோா் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் வழிகாட்டிய ஆசிரியா்களை பாராட்டினா்.

153 மாணவா்கள் திறமைப் பரிசு மற்றும் சிறந்த வெளியேறும் மாணவா் விருதுகளை பெற்றனா். மேலும் 22 மாணவா்கள் சிறந்த திட்டங்களுக்கான விருதுகளை பெற்றனா். அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய மாணவருக்கான விருது கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சோ்ந்த எஸ்.வி.வா்ஷிணிக்கு வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மாணவா்கள் பணிநியமன ஆணையைப் பெற்றனா். மின்னணு மற்றும் தொடா்பியல் பொறியியல் துறைத் தலைவா் எம். நிஷா ஏஞ்சலின் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.