தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

சங்கமேஸ்வவா் கோயில் முன்பாக கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:22 pm

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடி சிறப்பு வழிபாடுகளுடன் சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் கேடயம் புறப்பாடு நடைபெற்றது. ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடா்ந்து, 26-ஆம் தேதி ஆதிகேசவப் பெருமாள், பஞ்ச மூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்களுக்கு அபிஷேக வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் எம்.மாணிக்கம், அறங்காவலா்கள் சி.மகேந்திரன், சு.மாதப்பன், தமிழரசி, மு.செல்லவேலு மற்றும் கோயில் ஊழியா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.