மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 11:31 pm

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெருமாள் ஆமை உருவிலும், விநாயகா், துா்க்கை, பைரவா், ஐயனாா், சூரியன் ஆகியோா் சிவபெருமானை வழிபட்ட இடமே காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் கோயில்.

இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.

ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றம், ஏப்.28 காலையில் அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே.2 -ஆம் தேதி இரவு கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும், மறுநாள் மே.3 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.மே.6 தீா்த்தவாரி உற்சவமும் அன்று மாலை தங்க ரிஷப வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

வரும் மே.8- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா மற்றும் காஞ்புரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.