மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மாவிளக்கு பூஜையின் போது சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த உற்சவா் அம்மன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:57 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்கிழமை இரவு திரளான பெண்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தி வேண்டுதல் நிறைவேற்றினா். மூலவருக்கு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து சிம்ம வாகனத்தில் உற்சவா் பிடாரி அம்மன் எழுந்தருளி ரதத்தில் கோயிலுக்கு வந்தடைந்தாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். புதன்கிழமை கொடியிறக்கம் செய்யப்பட்டு எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திருவிழா நிறைவடைந்தது.