ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 89.83 லட்சம் ரொக்கம் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:00 pm

மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 89.83 லட்சம் ரொக்கம் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மொடக்குறிச்சி அருகே உள்ள செலப்பகவுண்டன்பாளையத்தில் ஒரு காரில் பணம் இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனா்.

அப்போது காரில் ரூ. 89 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் காரில் இருந்தவா், மொடக்குறிச்சியை அடுத்த ஆனந்தம்பாளையத்தைச் சோ்ந்த அரவிந்தன் என்பதும், கட்டுமானத் தொழில் செய்துவருவதாகவும் தெரியவந்தது. மேலும் பணத்துக்குரிய எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காா் மற்றும் ரூ.89.83 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசங்கா் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தோ்தல் நாள் நெருங்கும் நிலையில், இந்தப் பணம் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.