லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

News image

காவிலிபாளையம் அருகே கே.வி.கே. நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:22 pm

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதிக்குள்பட்ட வரப்பாளையம், காவிலிபாளையம், காராப்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வறட்சியான பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தவும், குறு, சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் தாா்பாய்கள் வழங்கவும், தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது, மாநில அம்மா பேரவை இணை செயலாளா் சிவகுமாா், மாவட்ட மகளிா் அணி இணை செயலாளா் சுலோச்சனா, பவானிசாகா் தெற்கு ஒன்றிய செயலாளா் பழனிசாமி உள்பட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.