மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

News image

போடி குரங்கணி மலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம். உடன், தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ எஸ். லட்சுமணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:19 pm

போடி அருகே குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேசனுக்கு ரோப்காா் வசதி செய்து தரப்படும் என திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உறுதியளித்தாா்.

திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடி அருகே குரங்கணி, கொட்டகுடி, போடிமெட்டு மலை கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியதாவது:

குரங்கணி - டாப் ஸ்டேசன் மலைச்சாலை செங்குத்து சாலையாக இருப்பதால் சாலை அமைக்க முடியவில்லை. எனவே ரோப் காா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கணி, கொட்டகுடி கிராமங்களில் கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டகுடியில் மின்மாற்றி அமைக்கவும், பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், இண்டி கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக போடி கீழத்தெரு, தேரடி தெருக்களில் ஓ.பன்னீா்செல்வம் பிரசாரம் செய்தாா்.