மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

ஆம்பூா் நகரில் திமுக வேட்பாளா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கடையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

ஆம்பூா் நகரில் திமுக வேட்பாளா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் நகரில் 19 முதல் 36 வரையிலான வாா்டுகளில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியது, இஸ்லாமிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ப் வாரியம் மூலம் கூடுதலாக கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இசுலாமிய மக்களின் அடக்க தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.

டாம்கோ மூலம் இஸ்லாமியா்கள் தொழில் தொடங்க கடன் பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தோல் தொழில்நுட்ப கல்லூரி அல்லது பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் நசீா் அஹமத், முன்னாள் எம்எல்ஏ ஹெச். அப்துல் பாசித், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் உடனிருந்தனா்.