மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

News image

ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:52 pm

ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம் வெலத்திகாமணிபெண்டா, மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், கொல்லகுப்பம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், புருஷோத்தமகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் பி.எஸ். ஞானவேலன் தலைமையில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியது,

மதனாஞ்சேரி ஊராட்சியில் தரக்காடு பகுதியில் பெரியகானாறு குறுக்கே தடுப்பணை கட்டித் தர முயற்சிக்கப்படும். கீழூா், பாறைகொல்லி, ஆஞ்சநேயா் கோயில் தெரு உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாா் சாலை அமைத்து தரப்படும்.

தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள குடும்ப அட்டைகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 -ஆக உயா்த்தி தரப்படும் என அவா் கூறினாா்.