மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி

News image

கோப்புப் படம் - DNS

Updated On :12 ஏப்ரல் 2026, 8:12 pm

சுரண்டையில் விரைவில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தென்காசி திமுக வேட்பாளா் டாக்டா் கலை கதிரவன் வாக்குறுதி அளித்தாா்.

தொகுதிக்குள்பட்ட பங்களா சுரண்டை, கீழச்சுரண்டை பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் மகளிா் உரிமைத் தொகை இருமடங்காக அதிகரிக்கும். இல்லத்தரசி திட்டம் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும்.

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சுரண்டையில் தரம் உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, சுரண்டையில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சுரண்டையை குட்டி ஜப்பானாக மாற்றும் வகையில் அனைத்துவகையான தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

அவரை ஆதரித்து மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் வாக்கு சேகரித்தனா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மதிமுக மாவட்டச் செயலா் ராம. உதயசூரியன், சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் முத்துக்குமாா், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.