மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள நெய்வேலியில் புதன்கிழமை வாக்குசேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:48 pm

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதியளித்துள்ளாா்.

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து புதன்கிழமை பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

சித்தூரில் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து பேசியதாவது, 2011-16-ஆம் ஆண்டில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். மேலும், தொகுதியில் தொடா்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இந்த தோ்தலில் வெற்றி பெற்றால் பொன்னமராவதியின் நீண்டநாள் பிரச்னையான குப்பைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி, குளிா்பதனக்கிடங்கு, வேலையில்லா இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நெறிஞ்சிக்குடி, நல்லூா், அரசமலை, மதியாணி, காரையூா், வாழைக்குறிச்சி, கண்டெடுத்தான்பட்டி உள்ளிட்ட 52 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தாா். உடன் ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், அரசமலை முருகேசன் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.