மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு

News image

கோபி அருகேயுள்ள குருமந்தூா்மேடு பகுதியில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:51 pm

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.பி.பிரபு, கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம், செல்லிபாளையம் காலனி, ஆண்டவா் மலை, சின்னகுளம், தங்கமலைகரடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும். குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றாா்.

இதையடுத்து, குருமந்தூா்மேடு பகுதியில் இருந்து காளியம்மன் நகா் வரை மாட்டு வண்டியில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா். இதைத் தொடா்ந்து, கோபி சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவா்களை சந்தித்த வேட்பாளா் வி.பி.பிரவு, அதிமுகவின் தோ்தல் அறிக்கையை விளக்கினாா்.

மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் வி.சி.சிவகுமாா், மாநில கொள்கை பரப்பு செயலாளா் காளிதாஸ், கோபி மேற்கு ஒன்றியத் தோ்தல் பொறுப்பாளா் மகுடேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.