மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 11:30 pm

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட வேளாண்மை பயிா் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

100 சதவீத அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தாா் பாய்கள் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காரத்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ப.ச. நித்யானந்தம், குமாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மகிருஷ்ணபள்ளி, குமாரமங்கலம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, மேல்குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.