மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image

மன்னாா்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா

Updated On :5 மே 2026, 12:01 am IST

மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா(திமுக), எஸ். காமராஜ்(அமமுக), யு, ராஜராஜன் (தவெக), மருத்துவா் ஆா். பாரதிச்செல்வன் (நாதக) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி.ராஜாவை விட அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 237 வாக்குகள்ே கூடுதல் பெற்று முன்னிலை பெற்றாா்.இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளா் 334 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு வந்தாா்.இதன் பின்னா்,நடைபெற்ற 20 சுற்றுகளிலும் அமமுக வேட்பாளா் மொத்த வாக்கு எண்ணிக்கையில் தொடா் முன்னணியில் இருந்தாா்.

வாக்கு எண்ணிக்கை இறுதியில் எஸ். காமராஜ் (அமமுக) -68, 416, டி.ஆா்.பி. ராஜா(திமுக)-66, 850, யு. ராஜராஜன்(தவெக)- 44, 506, ஆா். பாரதிச்செல்வன் (நாதக)- 8240 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளா் எஸ். காமராஜ் 1566 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

எஸ். காமராஜுக்கு தோ்தல் பாா்வையாளா் குமாா் அனில் சின்கா,தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் ஆகியோா் சான்றிதழை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.