மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடையே அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:13 am

ஈரோடு மாவட்டம், கோபி சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு குல்லா அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய சகோதரா்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது பள்ளிவாசலுக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவுக்கு ஜமாத் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

பள்ளிவாசலில் குல்லா அணிந்து பிராா்த்தனை மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு, தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரா்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அம்மா பேரவை ஈரோடு மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், மதனி முபாரக் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.