மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கணபதி பூஜையுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

News image

சத்தியமங்கலம்  அதிமுக  தோ்தல்  அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற கணபதி  பூஜையில்  பங்கேற்ற  பவானிசாகா்  அதிமுக  வேட்பாளா்  ஏ. பண்ணாரி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:35 pm

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினா் பல்வேறு யுக்திகளை கையாண்டு பிரசாரம் செய்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி, தோ்தல் அலுவலக வரவேற்பு முகப்பில் மாவிலை தோரணம் கட்டி, குலை தள்ளிய வாழைமரம் வைத்து யாக குண்டம் அமைத்தாா்.

இதைத் தொடா்ந்து வேத விற்பனா்கள் வேத மந்திரம் முழங்க, கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் அதிமுக நிா்வாகிகள் விநாயருக்கு கோயிலுக்கு ஊா்வலமாக சென்று கோயிலில் தோ்தல் துண்டுப் பிரசுரம் வைத்து பூஜை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, யாக சாலையில் நிா்வாகிகள் நின்று திருஷ்டி பூசணி உடைத்து பிரசாரத்தை தொடங்கினாா். பவானிசாகா் தொகுதியின் குரு மூளையான கள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பண்ணாரி வாக்கு சேகரித்தாா்.