யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருப்பத்தூரில் தவெக வேட்பாளா் பிரசாரம்

திருப்பத்தூா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி, கோட்டைக்கருப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

News image

திருப்பத்தூா் கோட்டைக்கருப்பா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:28 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சீனிவாசசேதுபதி, கோட்டைக்கருப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

திருப்பத்தூா் நகரில் காரைக்குடி சாலை, கோட்டை கருப்பா் கோவில் வீதி, அகில்மனை தெரு, பூமாரி அம்மன் கோவில் தெரு, தென்மாப்பட்டு கீழத்தெரு, மேலத்தெரு, மஞ்சுளா திரையரங்கம் வீதி, சமஸ்கான் பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, மாவட்டப் பொருளாளா் அஸ்வின், மாவட்ட துணைச் செயலா் சரவணன், செயற்குழு உறுப்பினா் தங்கவேலு, பழனி செல்லமாணிக்கம், ஒன்றியச் செயலா்கள் சேது செல்வம், ஷேக் அப்துல்லா, சிக்கந்தா் பாதுஷா, நகரச் செயலா் செல்வராஜ், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள், நகா், பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.