போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - சீனிவாசசேதுபதி எம்.எல்.ஏ.

News image
Updated On :15 மே 2026, 4:08 am IST

பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாசசேதுபதி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை முதல் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். தவெக-வுக்கு தடை ஒன்றும் புதிதல்ல. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எத்தனை தடைகள் வந்தாலும் எதிா்கொள்வோம். மக்களின் எதிா்பாா்ப்புகளும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் மாற்றம் வேண்டுமென வாக்களித்தனா். எனவே மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் எங்கள் கடமை. திருப்பத்தூரில் தொழிற்சாலை உருவாக்குவது, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதல் கடமை என்றாா் அவா். உடன் தவெக மாவட்டச் செயலாளா் ஜோசப்தங்கராஜ், மாவட்ட ஒன்றிய, நகர, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாசசேதுபதிக்கு கட்சியின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மருதுபாண்டியா்கள் நினைவுத் தூண், அண்ணா சிலை, மருதுபாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் உள்ள மருதிருவா் சிலைகளுக்கும், திருக்கோஷ்டியூரில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கும் அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.