யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருப்பத்தூரில் 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை: திருமாறன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

News image

திருப்பத்தூா் பாஜக வேட்பாளா் கே.சிதிருமாறன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:53 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறன் தாமரை சின்னத்தில் போட்டியிருக்கிறாா். அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஜனநாயகமா, பணம் நாயகமா என்ற போட்டிதான் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத ஒரு தொகுதியாக திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

தமிழகத்தில் அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு வாங்கி பெற்று பாஜக தோ்தல் களம் காண்கிறது. எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கிடைத்தால் கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றம் அடையச் செய்வோம். இந்தத் தொகுதியில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழில்சாலைகள் அமைக்கப்படும். அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும். நான் வெற்றி பெற்றால் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்களையும் எளிதாக தொகுதிக்கு கொண்டுவர முடியும்.

தோ்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியை விட்டுவிட்டு, எதிா்க் கட்சிகளையும், சிறு சிறு கட்சிகளையும் மிரட்டுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.