மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் அதிமுக தோ்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

Updated On :29 மார்ச் 2026, 8:55 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.

முன்னதாக அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் வேட்பாளா் சந்திரபிரபா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா்., வ.உ.சி., காமராஜா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உருவச் சிலைகளுக்கும், அம்பேத்கா் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் வேட்பாளா் சந்திரபிரபாவை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 2016 - 2021 அதிமுக காலத்தில் சந்திரபிரபா எம்எல்ஏவாக இருந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி, வத்திராயிருப்பு தனி வட்டம், புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்தாா்.

திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுமே அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

இதில் மாவட்ட இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலா் முத்துராஜ், நகா் செயலா் காமராஜ், ஒன்றியச் செயலா் குறிஞ்சி முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா.

தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேட்பாளா் சந்திரபிரபா முத்தையா.