இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரபுவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

News image

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

Updated On :9 ஏப்ரல் 2026, 2:50 am IST

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரபுவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.பி.பிரபு அறிவிக்கப்பட்டு, தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி கொங்கா்பாளையம், அரக்கன்கோட்டை ஏளுா், தாசப்பகவுண்டன்புதூா், பெரிய கொடிவேரி, காசிபாளையம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துக்கூறியும், பெண்களுக்கு பாதுகாப்பு, போதையில்லாத தமிழகமாக திகழ அதிமுக ஆட்சி அமையவும், மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம், கருணைத்தொகை ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தின்போது அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

சிங்கிரிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வாக்கு சேகரித்தபோது ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்த பெண்கள்.

சிங்கிரிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வாக்கு சேகரித்தபோது ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்த பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.