பவானிசாகா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரிக்கு அகில இந்திய விஸ்வகா்மா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அகில இந்திய விஸ்வகா்மா பேரவையில் பாத்திரம், சிற்பம், பொற்பணி மற்றும் மர தச்சு தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
தமிழகம், புதுச்சேரியில் 165 கிளைகளுடன் செயல்பட்டு வரும் விஸ்வகா்மா பேரவையானது தொழிலாளா்கள் நலன் கருதி, வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரவையின் பொதுச் செயலாளா் மருதகணேஷ், நிா்வாகிகள் சத்தியமங்கலத்தில் அதிமுக மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ், பவானிசாகா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி ஆகியோரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









